Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலி நரசிங்கபெருமாள் கோயில் குளத்தை ... கல்லல் தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூட்டி கிடக்கும் சிவன் கோவில்: பக்தர்கள் கவலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2015
01:03

உத்திரமேரூர்: வாடாதவூரில், கடந்த நான்கு ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவிலை திறந்து, அன்றாட வழிபாட்டுக்கு கொண்டு வர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது வாடாதவூர் கிராமம். இக்கிராமத்தில், பழமை வாய்ந்த கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் உள்ளது.மீண்டு வரும்

Default Image
Next News

இங்கு சிறப்பம்சமாக, தாமரை வடிவத்திலான பீடத்தின் மீது லிங்கம் அமைந்துள்ள து. கோவில் வளாகத்தின் மேற்கு திசையில் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், வடக்கில் துர்க்கை மற்றும் பிரம்மா, தெற்கில் மகாவிஷ்ணு மற்றும் தட்சணாமூர்த்தி, வட கிழக்கில் நவக்கிரகங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இங்கு வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் பதவிகள் மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

கடந்த 2010ம் ஆண்டு வரை சிறப்பாக பூஜைகள் நடந்து வந்த இக்கோவில், நிர்வாக சீர்கேடு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக பூட்டி கிடக்கிறது. இதனால், வாடாதவூர் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, அப்பகுதிவாசி கள் கூறுகையில், கோவில் வழிபாடு இல்லாததால், பரா மரிப்பின்றி சீரழிந்து, தற்போது கோவிலை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கிறது. சிவராத்திரி மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் கோவில் பூட்டி கிடப்பது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே, பூட்டி கிடக்கும் இக்கோவிலுக்கு அர்ச்சகரை நியமித்து, மீண்டும் திறந்து வழிபாட்டிற்கு விட, அறநிலைய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வருவாய் இல்லைஉத்திரமேரூர் ஒன்றிய அறநிலைய துறை ஆய்வாளர் கோவிந்தராஜ் கூறுகையில், கோவிலில் அவ்வப்போது பூஜைகள் நடத்திட, அப்பகுதி யில் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோவிலுக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம், மழை இல்லாததால் பயிரிடப்படாமல் உள்ளது. இதனால், கோவிலுக்கான வருமானம் தடைபட்டு உள்ளது. விரைவில், இக்கோவிலுக்கென அர்ச்சகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar