பதிவு செய்த நாள்
06
மார்
2015
01:03
பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற பெங்களூரு கரகம், ஏப்., 3ம் தேதி, பெங்களூரு தர்மராயசாமி கோவிலில் நடக்கிறது.பெங்களூருவின் திகளர பேட்டையிலுள்ள தர்மராயசாமி கோவிலில், பல ஆண்டுகளாக நடந்து வரும், கரக உற்சவம் ஏப்., 4ல் நடக்கவுள்ளதாக, மாநில காலண்டரில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், கரக உற்சவம், ஏப்., 3ம் தேதி நடக்கும் என, கோவில் நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.கரக உற்சவ கமிட்டி துணைத் தலைவரும், அர்ச்சகருமான லட்சுமண் கூறியதாவது:ஸ்ரீமன்மத நாம சந்ததியரின் பஞ்சாங்கத்தில், சைத்ர சுக்ல பவுர்ணமி, 2015 ஏப்., 3ம் தேதி மதியம், 3:00 மணிக்கு துவங்கி, மறுநாள் மாலை, 5:00 மணிக்கு முடிகிறது. அன்று மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை சந்திரகிரஹணம் உள்ளது. அதன் பின், கோவிலை சுத்தப்படுத்தி, ஹோமம் செய்தால், பவுர்ணமி இல்லாத நேரத்தில், கரக உற்சவம் செய்ததாக ஆகிவிடும். இதை கருத்தில் கொண்டு, கரக உற்சவத்தை, ஏப்., 3ம் தேதி நடத்த தீர்மானித்துள்ளோம். கரகம், சக்தியை ஆராதிக்கும் நடைமுறை என்பதால், பவுர்ணமி ராத்திரிகளில், கரக உற்சவம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.