கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவிலில், மாசிமக தேர்த்தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாசிமக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிகருட சேவை, கருட சேவை, துவஜாரோஹணம் ஆகியவை நடந்தது. தேர்த்திருவிழா நேற்று நடந்தது. கரூர், தாந்தோணிமலை, சுங்ககேட் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, ஸ்வாமியை வழிபாடு செய்தனர்.