துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) போட்டியில் வெற்றி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2015 02:03
பொறுமை குணம் படைத்த துலாம் ராசி அன்பர்களே!
சூரியன்,கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். புதன் மார்ச் 21 முதல் ஏப். 6 வரையும், செவ்வாய் மார்ச் 21 வரையும், சுக்கிரன் ஏப். 7க்கு பிறகும் நன்மையளிப்பர். எதிரிகளை முறியடிக்கும் பலம் உண்டாகும். வருமானம் கூடும். சமுக மதிப்பு அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் அலைச்சல் இருக்கும். மார்ச் 21க்கு பிறகு புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஏப். 6,7 ல் பெண்களால் நன்மை கிடைக்கும். ஏப். 1,2 ல் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தொழில், வியாபார ரீதியாக வெளியூர் பயணம் அடிக்கடி ஏற்படலாம். மார்ச் 21க்கு பிறகு ஆதாயம் அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். மார்ச் 20,21ல் திடீர் பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மார்ச் 21 க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால், பணியிடத்தில் செல்வாக்கு உயரும். போலீஸ், ராணுவத்தினர் சிறப்பான பலன் பெறுவர்.
கலைஞர்களுக்கு, சுக்கிரன் ஏப்.7ல் இடம் மாறுவதால், கடந்த மாதம் ஏற்பட்ட துன்பம் அடியோடு மறையும். பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும்.
மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர். ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று நடப்பர். மார்ச் 21 முதல் ஏப். 6 வரை போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். புதிய சொத்து மார்ச் 21க்குள் வாங்கலாம்.
பெண்கள் நற்பலனை காணலாம். தடைபட்டு வந்த திருமணம் விரைவில் கைகூடும். மார்ச் 15, ஏப். 12,13 தேதிகளில் சந்தோஷ அனுபவம் கிடைக்கும். விருந்து-விழா என சென்று வருவீர்கள்.
நல்ல நாள்: மார்ச் 20, 21, 22, 23, 24, 29, 30, 31 ஏப்ரல் 1, 2, 6, 7, 10, 11
கவன நாள்: மார்ச் 25, 26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1, 9 நிறம்: சிவப்பு, செந்துõரம்
வழிபாடு: சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு உதவுங்கள். சூரிய தரிசனம் செய்யுங்கள். வெள்ளியன்று விநாயகருக்கு விளக்கு ஏற்றுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »