விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில், வெள்ளிக் கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய் வானை சமேத சண்முக சுப்ரமணியர், ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலை வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.