பதிவு செய்த நாள்
16
மார்
2015
12:03
திருத்தணி: திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம், முதல் நாளில், சிறப்பு கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், நேற்று, பங்குனி மாதம் முதல் நாளை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் வளாகத்தில், யாகசாலையில், ஒன்பது கலசங்கள் வைத்து சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.