Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் பங்குனி உத்திர ... சபரிமலை பக்தர்களின் வசதிக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபி பச்சமலை முருகன் கோவில்ஏப்., 3ல் பங்குனி உத்திரம் தேர்த்திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2015
12:03

கோபி: கோபி பச்சமலை முருகன் கோவிலில், ஏப்., 3ல் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.வரும், 27ம் தேதி இரவு, 10 மணிக்கு கிராமசாந்தி நடக்கிறது. 28ல் காலை, 10 மணிக்கு கொடியேற்றம், மாலை, 4 மணிக்கு யாகசாலை பூஜை, 5 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், மாலை, 6 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.வரும், 29ல் மாலை, 5 மணிக்கு யானை வாகனத்தில் சுவாமி தேர்வீதி உலா வருதல், மாலை, 6 மணிக்கு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. 30ல் மாலை, 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், 6 மணிக்கு அபிஷேகம், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. வரும், 31ல் மாலை, 5 மணிக்கு அன்ன வாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், மாலை, 6 மணிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை, இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. ஏப்., 1ல் மாலை, 5 மணிக்கு ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சுவாமி தேர்வீதி வலம் வருதல், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. ஏப்., 2ல், 9 மணிக்கு சண்முகருக்கு சிகப்பு சாத்தி, காலை, 10 மணிக்கு கல்யாண சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண உற்சவம், பகல், 12 மணிக்கு அபிஷேகம், மாலை, 5 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல், மாலை 6 மணிக்கு சண்முகருக்கு வெள்ளை சாத்தி, இரவு 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு. ஏப்., 3ல் காலை, 7 மணிக்கு மகன்யாச அபிஷேகம், 7.30க்கு திருப்படி பூஜை, 8 மணிக்கு சண்முகருக்கு பச்சை சாத்தி, காலை, 6 முதல் பகல், 1 மணி வரை காவடி, பால்குடங்கள், அபிஷேகங்கள், மாலை, 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் நடக்கிறது. 4ல், 12 மணிக்கு பரிவேட்டை, இரவு, 8 மணிக்கு வள்ளி தெய்வானை, சமேத சண்முகப்பெருமான் மலர் பல்லாக்கில் நகர் வலம் வருதல். 5ல் காலை, 10 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், பகல் 12 மணிக்கு தெப்பத்திருவிழா, கொடி இறக்குதல், பகல் 1 மணிக்கு அபிஷேகம் மகா தீபாராதனை நடக்கிறது.செயல் அலுவலர் பாலமுருகன், திருப்பணிக்குழு தலைவர் ஈஸ்வரன், பரம்பரை அறங்காவலர்கள் ராமன், ராஜகோபால் ஆகியோர், ஏற்பாடுகளை செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேலூர்; குடியாத்தம் அருகே கருமாரி அம்மன் கல் சிலையில் இருந்து இடதுபுற கண்ணீல் தண்ணீர் வரும் காட்சி ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலைக்குள் நுழையும் வாகனங்களுக்கு இனிமேல் பாஸ்டேக் கட்டாயம். இந்தப் புதிய கொள்கை ஆகஸ்ட் ... மேலும்
 
temple news
மேலூர்; மேலூர் நாகம்மாள் கோயில் 61 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி மாரியம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar