பதிவு செய்த நாள்
27
மார்
2015
12:03
பொங்கலூர் : பொங்கலூர் கந்தாம்பாளையம் பிரிவில் உள்ள கணபதி, கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், விமரிசை யாக நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜை, புண்யாகவாசனை, சூர்ய கும்ப பூஜை, துவார பூஜை, திவ்ய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கணபதி, கன்னிமார், கருப்பராய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடந்தது.