பதிவு செய்த நாள்
28
மார்
2015
11:03
கம்மாபுரம்: மேலப்பாலையூர் செல்லியம்மன் கோவிலில், வரும் 3ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த மேலப்பாலையூர் செல்லியம்மன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. வரும் 3ம் தேதி செடல் திருவிழாவையொட்டி அன்று காலை 7:00 மணிக்கு மங்கள கிடா பலி நிகழ்ச்சி, 11:00 மணிக்கு பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாலை 3:00 மணிக்கு அன்னப்படையல், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், கடந்த 24ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி காலை, மாலை சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. வரும் 3ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10:00 மணிக்கு மேலக்குளத்திலிருந்து பால்குடம், காவடி சுமந்து, செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா நடக்கிறது.