பதிவு செய்த நாள்
28
மார்
2015
11:03
மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவில் பிரமோற்சவ விழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை அங்காளம்மன் கோவில் பிரமோற்சவம் வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 30ம் தேதி பாவாடைராயர் எல்லை கட்டுதல் விநாயகர், அங்காளம்மன் வீதியுலா, 31ம் தேதி விநாயகர் பாவாடைராயன் அங்காளம்மன் சிங்கவாகனத்தில் வீதியுலா, 1ம் தேதி விநாயகர், பாவாடைராயன் அங்காளம்மன் நான்முகன் பூப்பரையுடன் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி விநாயகர் , பாவாடைராயன், அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதி யுலா, 3ம் தேதி விநாயகர் பாவாடைராயன், அங்காளம்மன் யானை வாகனத்தில் வீதியுலா மற்றும் அக்கினி சட்டி ஊர்வலம் நடக்கிறது, 4ம் தேதி விநாயகர், பாவாடைராயன், அங்காளம்மன், ஈஸ்வரி கபாலம் மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி பரந்தாமன் நகரசோதனை, இரவு 12 மணிக்கு பூதகணங்களுடன் காளி முரம் ஏந்தும் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி மாலை அங்காளம்மன் தேரில் சென்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி மாலை பாவாடைராயன் அருணாச்சி திருமணம் நடக்கிறது. இரவு அங்காளம்மன் தெப்பல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன் செய்து வருகின்றனர்.