காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி தெப்ப திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2015 01:04
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ தெப்ப திருவிழா நடந்தது. காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 26 மற்றும் 27ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. 28ம் தேதி அஷ்டதிக் பலி பூஜையுடன் கைலாசநாதர் யானை வாகனத்திலும், 29ம் தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் வீதி உலா நடந்தது.31ம் தேதி திருக்கல்யாணம், 2ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப திருவிழா நடந்தது. இதில், சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.