Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வயலூர் முருகன் கோவிலில் ... திரவுபதி அம்மன் தீமிதி வீதியுலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் லிங்கம் மீது சூரிய ஒளிபரவசத்துடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2015
01:04

சென்னிமலை: சென்னிமலை அருகே, பழமையான ஈஸ்வரன் கோவில் லிங்கத்தின் மீது, சூரிய ஒளி பட்டதால், பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ளது பிரம்மலிங்கேஸ்வரர் கோவில். பல நூறு ஆண்டுகள் பழமையான இக்கோவில் கல்வெட்டில், 1,200 ஆண்டுகளுக்கு முன்பு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன் பல்வேறு திருப்பணிகள் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இக்கோவிலில், பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும் மே முதல் வாரத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாலை, 5.10 மணியளவில் கோவிலில் உள்ள லிங்கம் மீது, சூரிய ஒளி பட்டு வருவதை, அங்கு வேலை செய்த பணியாளர்கள் கண்டனர். இதுபற்றி அறிந்த மக்கள் பரவசம் அடைந்து, லிங்க வடிவிலான சிவபெருமானை, ஒளி மூலம், சூரிய பகவான் வழிபடுவதாக பக்தர்கள் கருதுகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், 3 நாட்கள் மட்டும், மாலை நேரத்தில், 30 வினாடிகள், இந்த லிங்கம் மீது சூரிய ஒளி படும். இதை காண பக்தர்கள் வருவதும் தரிசிப்பதும் வழக்கம். இந்தாண்டு, கடந்த சில நாட்களாக இதுபோன்ற நிகழ்வு நடக்கிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar