பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
10:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்த உற்சவம் நேற்று நடந்தது. நேற்று காலை உற்சவர் சன்னதியில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, சீவிலிநாயகர், அஸ்தர தேவர் எழுந்தருளினர். மார்ச் 24முதல் நடைபெற்றுவந்த யாகசாலை பூஜைகள் நேற்று காலை பூர்த்தி செய்யப்பட்டு, புனிதநீர் மூலம் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. உச்சிகால பூஜைக்குப்பின்பு, மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர், பல்லக்கில் அஸ்தர தேவர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர் சரவணப்பொய்கையில் எழுந்தருளினர். பூஜைகள் முடிந்து சிவாச்சார்யார்களால் அஸ்தர தேவர் சவரணப் பொய் கை தண்ணீருக்குள் கொண்டுசென்று, பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீர்த்த உற்சவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார்.