Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 15ல் ... ராகவேந்திரர் கோவிலில் ராமர் பட்டாபிஷேகம்! ராகவேந்திரர் கோவிலில் ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருப்பணிகள் நிறுத்தம்!
எழுத்தின் அளவு:
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் தேர் திருப்பணிகள் நிறுத்தம்!

பதிவு செய்த நாள்

10 ஏப்
2015
11:04

மீஞ்சூர்: நிதி பற்றாக்குறையால், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில், புதிய தேரின் திருப்பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளன. திருப்பணிகளை  பூர்த்தி செய்ய, கொடையாளர்களிடம் இருந்து, நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர், பெருந்தேவி தாய õர் சமேத வரதராஜ பெருமாள் கோவில்,  800 ஆண்டுகள்  பழமை வாய்ந்தது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின்போது,  இங்கும் அதே நாட்களில் விழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும், பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாள் தேர் திருவிழா, வெகு விமரிசையாக நடந்து  வருகிறது.

36 அடி உயரம்:
தேர் திருவிழாவின்போது, பயன்படுத்தப்பட்டு வரும், தற்போது உள்ள மரத்தேர், பலவீனம் ஆனதை தொடர்ந்து, அதற்கு பதிலாக,  36 அடி உயரத்தில், 40 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் செய்ய திட்டமிடப்பட்டது.  அதற்கான நிதியை, பெரும் கொடையாளர்கள் மூலம் ÷ மற்கொள்வது என, தீர்மானிக்கப்பட்டது. கடந்த, 2013ம்  ஆண்டு, தேரின் திருப்பணிகள் சென்னை, திருமழிசை, ஸ்தபதி கஜேந்திரன் குழுவினரால்  மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து நடைபெற்று வந்த பணிகளில், 15 அடி உயரத்திற்கு தேவசாசனம்,  சிம்மாசனம் வரை பணிகள் முடிந்துள்ளன.  சிற்ப வேலைப்பாடுகளுக்கான பணிகள் நடைபெற்று வந்தன. திட்ட மதிப்பீட்டையும் கடந்து, இதுவரை, 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

கிடப்பில்... மேலும், புதிய தேரை தயார் செய்வதற்கு ஏதுவாக, மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், 50 அடி உயரத்தில், 18 லட்சம்  ரூபாயில், சிமென்ட் கூரை ஒன்றும் துரிதமாக ஏற்படுத்தி தரப்பட்டது. புதிய தேருக்கான பணிகளில், 50 சதவீதம் முடிந்த நிலையில், ஆறு மாத ங்களாக, மேற்கொண்டு பணிகள் எதுவும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.  நிதி பற்றாக்குறையால், தேரின் திருப்பணிகள் நின்று போனதாக கூறப்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட தேரின் திருப்பணிகளை உடனடியாக துவக்கி, ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள தேர் திரு விழாவிற்குள், முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆண்டும் பழையது: இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத இந்து அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எதிர்பார்த்ததைவிட, கூடுதலாக செலவாகி வருகிறது. மேலும், 40 லட்சம் ரூபாய் வரை நிதி தேவைப்படுகிறது. பெரும் கொடையாளர்கள் மூலமே,  தேரின் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மீண்டும் அவர்களிடம் எடுத்துரைத்து, திருப்பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம்.  இந்த ஆண்டும்  பழைய தேரில், திருவிழா நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்காக தேரில் உள்ள பழுதுகளை சரி செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar