பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
02:04
யாரையும் எளிதில் நம்பி விடும் கடக ராசி அன்பர்களே!
வளர்ச்சி தரும் காலமாக இந்த மாதம் அமையும். 10 ல் இருக்கும் சூரியன், புதன் நற்பலனைத் தருவர். சுக்கிரன் ஏப். 21ல் சாதகமான இடத்தில் செல்வது நல்லது. 3ல் உள்ள ராகு தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். குடும்பத்தில் குதுõகலம் ஏற்படும். நினைத்தது நிறைவேறும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். பெண்களால் நன்மை ஏற்படும். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும்.தொழிலதிபர்கள், வியாபாரிகள் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பர். லாபம் அதிகரிக்கும். கூட்டு தொழில் நல்ல வளர்ச்சி அடையும். நண்பர்கள் தக்க நேரத்தில் உதவ முன் வருவர். மே 8,9 ல் எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும்.
பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை அனைத்தும் எளிதில் நிறைவேறும். மே 2 க்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான பலன் பெறுவர்.
கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் மூலம் வருமானம் கூடும்.
அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் நற்பெயர் காண்பர். மே 2க்கு பிறகு புகழ் வளரும். சிலருக்கு விருது, பாராட்டு கிடைக்க யோகம் உண்டு.
மாணவர்கள் கல்வியில் நல்ல வளர்ச்சியடைவர். தேர்வை சிறப்பாக எழுதி முடிப்பர். விவசாயிகள் நெல், சோளம், பழவகைகள், கிழங்கு வகைகள் போன்றவற்றில் கூடுதல் வருமானம் காண்பர். மே 2க்கு பிறகு புதிய சொத்து வாங்கலாம். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் கிடைக்கும்.
பெண்கள் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். விருப்பம் போல புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும்.
நல்ல நாள்: ஏப். 14, 19, 20, 21, 22, 25, 26, 27, 30 மே 1, 2, 8, 9, 10, 11
கவன நாள்: ஏப். 15,16 மே 12,13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்டம் எண்: 3,5,7 நிறம்: செந்துõரம், நீலம்
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோவிக்கு சென்று வரலாம். ஆஞ்சநேயர் வழிபாடு முன்னேற்றம் கொடுக்கும். மே2 வரை தினமும் முருகனை வணங்குங்கள்.