பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தமிழ்ப் புத்தாண்டையொட்டி அய்யனார் கோவிலில் லட்ச தீப விழா நடந்தது. விழாவையொட்டி அய் யனாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து கோவில் வரை விளக்குகள் ஏற்பட்டது. கோவில் மேலே உள்ள மலையில் பெரிய அளவிலான விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. ஊராட்சித் தலைவர் நாகராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு அய்யனார் சுவாமி வீதியுலா நடந்தது.