Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலம் கோவில்களில் சிறப்பு பூஜை! வெள்ளோட்டத்துடன் நிற்கிறது சிவகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
100 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை பெரிய கோவிலில் ஏப்., 29ல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2015
12:04

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியக்கோவில் சித்திரை பெருவிழாவையொட்டி, 100 ஆண்டுகளுக்கு பின், வரும், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, 17 நாட்கள் நடத்தப்படும். பழமை வாய்ந்த மரத்தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து கடந்த, 100 ஆண்டுகளாக, சித்திரை திருவிழாவில் தேரோட்டம் தடை பட்டிருந்தது. தஞ்சை பெரியகோவிலுக்கு, புதிய தேர் நிர்மாணிக்குமாறு பக்தர்களிடையே கோரிக்கைகள் வலுத்தது. தேவஸ்தானம் சார்பிலும், இதற்கான முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சை பெரியகோவிலுக்கு, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. ஆகம விதிகளின்படி கலைநயத்துடன் கூடிய புதிய தேர் நிர்மாணிக்கும் பணிகளை துவக்கினர். அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், தேரோட்டத்துக்காக தேர் தயாராக உள்ளது. பெரியகோவில் சித்திரை பெருவிழா இன்று (16ம் தேதி) துவங்கி, மே, 2ம் தேதி வரை நடக்கிறது. இன்று காலை, மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டு பெருவிழா துவங்குகிறது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 20ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டம் நடக்கிறது. 100 ஆண்டுகளுக்கு பின் வரும், 29ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.ஃ சித்திரை பெருவிழா ஏற்பாடுகளை, பெரியக்கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar