நாகர்கோவில் : நாகர்கோவில் கலைநகர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா வரும 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் தீபாராதனை சிறப்பு பூஜைகள், பஜனை, வில்லிசை ஆகியவை நடைபெறுகிறது. 18-ம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கபடி போட்டியை டி.எஸ்.பி. ஈஸ்வரன் தொடங்கி வைக்கிறார். 20-ம் தேதி வருஷாபிஷேக சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 21-ம் தேதி உச்சகாலபூஜை, அன்னதானம், 22-ம் தேதி பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு எட்டு மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.