திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டியில் அமைந்துள்ள அனுமன் கோயிலில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டும் அனுமனுக்கு ஜமீன்தார் அலங்காரம் செய்யப்படுகிறது. இந்தத் திருக்கோலத்தில் அனுமனை தரிசிப்பவர்களுக்கு செல்வ கடாட்சம் பெருகும் என்பதால் அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனுமனை தரிசித்துச் செல்கின்றனர்.