ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள லேபாக்ஷி வீரபத்திரர் கோயிலில் அமைந்துள்ள நந்தி சிலை 27 அடி நீளமும், 15 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இந்த நந்தியின் கழுத்தில் உள்ள மணிமாலையில் ஒரு இருதலைக் கழுகும். கழுகின் இரு தலைகளின் பக்கங்களில் யானையும், யானையின் கீழே தொங்கும் சிங்கமும், சிங்கத்திலிருந்து மணியும் என நந்தியின் கழுத்தை அலங்கரிக்கின்றன.