ராமனைப் பெற்றவள் கவுசல்யா. தாயின் மீதுள்ள ஈடுபாட்டினால் ராமனுக்கு கோசலராமன் என்றும் ஒரு பெயர் ஏற்பட்டது. வேங்கடேச சுப்ரபாதம் கவுசல்யா (கோசலை) சுப்ரஜா ராமா என்றே தொடங்குவதைக் கேட்கலாம். அதேபோல, தேவகி மைந்தனான கண்ணன் தேவகீ நந்தன் என்றும் அழைக்கப்படுகிறான். ராமதுõதன் அனுமன் தன் அன்னை அஞ்சனை மீது கொண்ட அன்பினால் ஆஞ்சநேயனானான். அஞ்சனை மைந்தன் என்பது இதன்பொருளாகும். இப்படி உலகைக் காக்கும் பரம் பொருளையே பிள்ளைகளாகப் பெற்றவர்களாக புகழ் பெற்றனர் இந்த தாய்மார்கள்.