குருவாயூரில் பாலகிருஷ்ணனை காண கூடும் பக்தர்கள் ஏராளம். நாளும் திருவிழா கோலம் தான். ஒவ்வொரு நாள் இரவும் அர்த்தஜாம பூஜைக்குப் பின் ஒன்பது மணிக்கு முன்மண்டபத்தில் நாட்டிய நாடகமான கிருஷ்ணாட்டம் நடக்கும். அதிகாலையில் விஸ்வரூப தரிசனம்காணலாம். இதன் பின் கிருஷ்ணனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும், வாகை மரப்பட்டையை அரைத்து பூசும்வாகைச்சாத்தும் நடத்தப்படும். பின் சந்தன அபிஷேகம், நெல்பொரி, வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை நைவேத்யம் செய்யப்படும். அன்னப்பிராஸனம் எனப்படும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஆண்டு நிறைவன்று முதன்முதலாக சோறுõட்டும் நிகழ்ச்சி இங்கு பிரசித்தம். எடைக்கு எடை நம் தகுதிக்கேற்ப துலாபாரம் வழங்குதலும் சிறப்பான நேர்த்திக்கடனாக விளங்குகிறது.