புதுச்சேரி:பெரிய மார்க்கெட், பூக்கடை அரச மரத்தடி வரசித்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.வரசித்தி விநாயகர் கோவிலின் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் கடந்த ௨௨ம் தேதி துவங்கியது.விநாயகருக்கு, ௧௦௮ சங்காபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு, வீதியுலா நடந்தது.விழா ஏற்பாடுகளை, பூத்தொழில்சார்ந்தோர் நல வாழ்வு சங்க நிர்வாகிகள் செல்வகுமார், சக்திவேல், ஜோதி நாராயணன், ராஜ், அக்கடவள்ளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.