Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ... மதுரை சித்திரை விழாவிற்கு செலவு ரூ. 1 கோடி: இந்தாண்டும் புதுமையான பணிகள் இல்லை! மதுரை சித்திரை விழாவிற்கு செலவு ரூ. 1 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

30 ஏப்
2015
12:04

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவில், மகாகும்பாபிஷேகம் வரும் ஜூன், 7ம்தேதி நடைபெறுவதை அடுத்து, மண்டபங்களுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ திருத்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒரு கோடி ரூபாய் செலவில், கலை நயத்துடன், புதிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு கோடி ரூபாய் செலவில், எழில்மிகு விமானங்கள், சுற்றுப்பிரகார மண்டபங்கள், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், தாயார் சன்னதி, யாகசாலை, ராஜகோபுர ஆகிய முன் மண்டபங்கள், திருமதில்கள் அனைத்தும், அழகுடனும், பொலிவுடனும் கலைக்கோவிலாக சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், அனைத்து மண்டபங்களின் மேல்பகுதியில் வர்ணம் பூசி, அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மகா கும்பாபிஷேக விழா, ஜூன் 3ம் தேதி துவங்குகிறது. ஜூன் 6 மாலை, கோபுர கலசங்கள் நிறுவுதலும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெறுகிறது. ஜூன் 7ம் தேதி காலை, ஆறாம் கால யாக பூஜையை அடுத்து, 9:15 மணிக்கு ராஜகோபுரம், கோவில் கோபுரம், மூலவர் சுவாமிகளுக்கு, புனித தீர்த்தங்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜீவானந்தம், செயல் அலுவலர் நந்தகுமார், கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar