Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மே 10ல் நடராஜர் அபிஷேகம்! வெற்றி கிட்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தங்கமான மனசு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2015
02:05

காஞ்சிப் பெரியவர் தனது 85வது வயதில் கர்நாடக மாநில கோயில்களுக்கு யாத்திரை சென்றிருந்தார். ஓரிடத்தில் அவர் தங்கியிருந்த போது, அவரைத் தரிசிக்க, தஞ்சாவூர் பங்காரு  காமாட்சி கோயில் ஸ்தானிகர் பிரசாதத்துடன் சென்றார். ஸ்தானிகரைக் கண்டபெரியவர், இவ்வளவு துõரம் வந்து, எனக்காக அம்மன் பிரசாதம் தர்றியே! உனக்கு ஒரு பவுன் தங்கக்காசு சம்பாவணையா(அன்பளிப்பு) தர  விரும்பறேன், என்று தெரிவித்தார். அங்கிருந்த பக்தர்களிடம், யாரிடமாவது ஒரு பவுன் தங்கக் காசு இருக்கா? என்று கேட்டார். யாரிடமும் காசு இல்லை. தர்ம சங்கடமான சூழலில் ஸ்தானிகர்,  எப்போதும் எனக்கு தங்கள் தயவிருந்தால் போதும். ஒரு குறையும் உண்டாகாது, என்று தன் நிலையை வெளிப்படுத்தினார். பெரியவர்அப்போது, கட்டாயம் உனக்கு பவுன் காசு கொடுத்தாகணும். நான் இந்த மடத்திற்கு பட்டத்திற்கு வந்த போது, உன் அப்பாவும் இதே போல அம்மன் பிரசாதத்தை கொண்டு வந்தார், என்று நடந்ததை நினைவூட்டினார். இதைக் கேட்ட பக்தர்கள் தங்களிடம் இருந்த நகைகளைக் கொடுக்கமுன் வந்தனர். எனக்கு நகை வேண்டாம். பவுன் காசு தான் வேணும், என்றார் பெரியவர். ஸ்தானிகர் அங்கேயே இருந்தார். மாலை நேரமும் ஆகிவிட்டது. அப்போது , சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) நடத்த இருந்த கணவனும் , மனைவியும் பெரியவரிடம் ஆசிபெற அங்கு வந்தனர். வந்தவர் ஒரு மாங்கல்யத்தையும், தங்கக் காசையும் பெரியவரிடம்கொடுத்தனர். பெரியவரிடம், சுவாமி! இந்த மாங்கல்யம் காலஞ்சென்ற என் அம்மாவோடது. இதையே 60ம் கல்யாணத்திலே என் மனைவிக்கு அணிவிக்க ஆசைப்படுறேன். அதற்கு உங்க சம்மதம் வேணும். புதுசா தாலி செய்யச் சொன்னாலும், பவுன் காசு கொண்டு வந்திருக்கேன். அதைத் தொட்டு ஆசிர்வாதம் பண்ணனும், என்றார். பெரியவர் மாங்கல்யத்தைத் தொட்டுக் கொடுத்து வந்த பெண்ணிடம்,உன் கணவர் மனசு போல, மாமியார் தாலியைக் கட்டிக் கொண்டு, நீ தீர்க்க சுமங்கலியா வாழணும், என வாழ்த்தினார். பிறகு இனி என்னோட விருப்பத்தையும் கேளுங்க. இந்த பவுன் காசை நான் எடுத்துக்கலாமா? என்றார். நாங்க செய்த புண்ணியம். இந்த காசை எடுத்துக் கொண்டு எங்களுக்கு ஆசியளிக்கணும், என்று சொல்லி அவரது பாதங்களில்விழுந்தனர். அதன்பின், ஸ்தானிகரை அழைத்த பெரியவர், பவுன் காசைக் கொடுத் தார்.அவரதுதங்க மனம் கண்டு நெகிழ்ந்தார்ஸ்தானிகர்.   (மகான் காஞ்சிப் பெரியவர்)

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar