சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உளுந்தாண்டார் கோயில். இங்கு யாகமண்டபத்தில் சதுரக்கல்லில் புடைப்புச் சிற்பமாக அஷ்டபுஜ துர்க்கையாக கம்பீரத்தோடு காட்சி தருகிறாள் அம்பிகை. அகத்திய முனிவர் வணங்கிய இந்த அன்னையை ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் தரிசித்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும் என்கின்றனர்.