திண்டிவனம்: வெள்ளிமேடுப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. முன்னதாக கடந்த 3ம் தேதி இரவு அம்மனுக்கு காப்பு கட்டி, சக்தி கரக ஊர்வலம் நடந்தது. மறுநாள் கரகம் ஊர்வலம் நடந்தது. கடந்த 5ம் தேதி சக்தி கரக ஊர்வலமும், தொடர்ந்து சாகை வார்த்தல் திருவிழாவும் நடந்தது. இரவு வாண வேடிக்கையுடன் புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் வீதியுலா நடந்தது. பின்னர், வந்தவாசி சுபாஷ் நாடக குழுவினரின் நாடக நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.