1. தேவ யக்ஞம், 2. ரிஷியக்ஞம், 3. நரயக்ஞம், 4.பித்ருயக்ஞம், 5.பூதயக்ஞம்
1. தேவயக்ஞம் - கடவுளை வழிபடுதல். கடவுளை வணங்குதல், பிரார்தித்தல் நமது இறை நம்பிக்கையாகும். இதன் மூலம் நாம் அக முன்னேற்றம் அடைகிறோம் என்பதாலே தான் நம்முன்னோர்கள் கடவுள் வழிபாட்டு முறைகளெல்லாம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதை முறையாக செய்தல் தேவ யக்ஞமாகும்.
2. ரிஷியக்ஞம் - நல்ல நூல்களை ஓதுதல். நம் முன்னோர்கள் தங்களது அனுஷ்டானங்களில் கண்ட உண்மைகளை புத்தகங்களாக தொகுத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த நல்ல கருத்துக்களை வாசித்து வாழ்வாக மாற்றுதல் ரிஷியக்ஞம் அல்லது ப்ரம்மயக்ஞமாகும்.
3. பித்ரு யக்ஞம் - பெரியோர்களுக்கு உதவுதல் பெற்றோர், வயது முதிர்ந்த பெரியோர்களுக்கு செய்யும் உதவு வேள்வியாகிறது. அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர் மகிழ்ச்சியடைய செய்வது பித்ருயக்ஞமாகும்.
4. நாயக்ஞம் - மனித குல சேவை இறைவனே எல்லா உயிர்களுமாக விளங்குகிறார். மானுடம் இறைவன் பிரதிபலிப்பாகிறது. அந்த மனிதர்களுக்கு உதவுதல் இறைவழிபாட்டுக்கு நிகர். மனித குல சேவை மகாதேவனுக்கு செய்யும் சேவையாகிறது. இதுவே நரயக்ஞமாகும்.
5. பூத யக்ஞம் - உயிரினங்களை பாதுகாத்தல் பயிர், கால்நடை போன்றவற்றை பாதுகாத்தல், அபிவிருத்தி செய்தல் பூதயக்ஞமாகும்.