Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெள்ளீசுவரர் கோவிலில் விடையாற்றி ... கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை தேரோட்டத்தில் இருள் அகற்ற நடவடிக்கை தேவை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2015
12:05

வடமதுரை : வடமதுரையில் தேரோடும் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் வயர்களை நிரந்தரமாக மாற்றியமைக்க வேண்டும். வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் சில நூறு ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்ததாகும். இங்கு ஆடி மாதத்தில் தேரோட்டம் நான்கு ரத வீதிகள் வழியே நடக்கிறது. தேரோட்டம் துவங்கும் முன்னர், மின்வாரிய ஊழியர்கள் தேர் வீதிகளின் வழியே குறுக்கே செல்லும் மின் வயர்களை கழற்றிவிடுவர். தேர் கடந்த பின்னர், ஒவ்வொரு மின் வயராக மீண்டும் பொருத்துவர். இதனால் தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளும் இருளில் முழ்கி இருக்கும். தேருடன் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் மூலம் எரியும் தேர் அலங்கார விளக்குகளில் இருந்து கிடைக்கும் வெளிச்சம் இருக்கும். கடந்த திருவிழா வரை பயன்பாட்டில் இருந்த தேர் சிறிய அளவிலானது என்பதால், குறைந்தளவு சிரமத்துடன் பக்தர்கள் தேரை இழுத்து சமாளித்தனர்.

புதிய தேர்: தற்போது தேர் பழுதாகிவிட்டதால், புதிய தேர் அமைக்கும் பணி அறநிலையத்துறை அனுமதியுடன் நடந்து வருகிறது. 27.60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 11 டன் எடையுடன் 15 அடி அகலம், 35 அடி உயராக கொண்டதாக புதிய தேர் கட்டுமான பணி நடந்து வருகிறது. புதிய தேர் அதிக எடை, அகலம், உயரம் கொண்டதாக இருப்பதால் இருளில் தேரோட்டம் நடத்துவது மிகவும் சிரமமான காரியம். எனவே, தேர் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் வயர்களை நிரந்தரமாக அகற்றிவிட்டு, மாற்று இடங்களில் இருக்கும் மின்கம்பங்களின் மூலமாகவோ, புதிய கம்பங்கள் நிறுவியோ, கேபிள் பதித்தோ தேரோட்டத்திற்கு இடையூறு இல்லாமல் மாற்றி அமைக்க வேண்டும். தேரோட்டத்தின் போது ரத வீதிகளில் முழு அளவில் மின்சப்ளை இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு தரப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி, திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar