பதிவு செய்த நாள்
26
மே
2015
11:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று தேவேந்திர மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 6:30 மணியளவில் கோவிலில் இருந்து விநாயகர், நவ வீரர்கள், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர் ஆகியோர், கோவில் கோபுரம் முன் எழுந்தருளினர். பின், சுப்ரமணிய சுவாமி தேவேந்திர மயில் வாகனத்தில் எழுந்தருளிய பின்பு, கோபுர தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 6:45 மணிக்கு வள்ளி - தெய்வானையுடன் தேவேந்திர மயில் வாகனத்தில் சுப்ரமணிய சுவாமி, ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமியை தொடர்ந்து, விநாயகர், நவவீரர்கள், அருணகிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகியோர் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.