திரவுபதியம்மன் கோவிலில் சாதம் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2015 12:05
திருக்கனுார்; செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழாவையொட்டி பகாசூரனுக்கு சாதம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டில் திரவுபதியம்மன், முத்து மாரியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. இன்று (26ம் தேதி) காலை 10:00 மணிக்கு பகாசூரனுக்கு சாதம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின், 29ம் தேதி காலை 11:00 மணிக்கு மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது.