Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பணிகள் எப்போது முடியும் : ... மண்டலாபிஷேக பூர்த்தி விழா! மண்டலாபிஷேக பூர்த்தி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடந்தை மகாமகத்தை தென்பாரத கும்பமேளாவாக கொண்டாட அகில பாரத துறவியர் சங்கம் வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
குடந்தை மகாமகத்தை தென்பாரத கும்பமேளாவாக கொண்டாட அகில பாரத துறவியர் சங்கம் வேண்டுகோள்!

பதிவு செய்த நாள்

29 மே
2015
11:05

மயிலாடுதுறை: கும்பகோணம் மகாமகத்தை தென்பாரத கும்பமேளாவாக கொண்டாட வேண்டும் என்று அகில பாரத துறவியர் சங்கத்தினர்கள் கூறியுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அகில பாரத துறவியர் சங்க செயலாளர், பேரூர் ஆதீனம் இளை யப்பட்டம் மருதாசல அடிகளார்,உளுந்தூர்பேட்டை அப்பர் சுவாமிகள் மடம் சிவஞானதேசிக சுவாமி கள், திருச்சங்கோடு சண்முகநாதசிவஞானதேசிக சுவாமிகள்,தவத்திருவேதானந்த ஞானசரஸ்வதி சுவா மிகள் மற்றும் துறவிகள் குடந்தை மகாமகதை தென்பாரத கும்பமேலாவாக நடத்துவதற்காகவும் தமிழ கத்தில் அனைத்து துறவிகளையும் அழைப்பது குறித்தும்  தருமபுரம் ஆதீனம் 26 வது குருமகா சன்னிதா னம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அகில பாரத துறவியர் சங்கசெயலாளம்,பேரூர் ஆதீன இளையப்பட்ட மருதாசல அடிகளார் நி ருபர்களிடம் கூறுகையில் 2016 ம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெறும் மகா மகம் தென்பாரத கும்ப மேளாவாக நடத்தவேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறவி யர்களை பங்கேற்க செய்வதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீனங்கள்,துறவியர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.துறவியர் சங்கம் சார்பில் காவிரி நதியின் தூய்மையை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஐப்பசிமாதம் கூடுதுறை,கொங்கேரி,திருப்பராயத்துறை,ஸ்ரீரங்கம்,திருவை யாறு, கும்பகோணம் பாலக்கரை, மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டம் பகுதியில் காவிரிக்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தி காவிரிநதி தூய்மையின் முக்கியத்துவைத்தை வலியுறுத்தி வருகிறோம்.

வடஇ ந்தியாவில் அமிர்தகலசத்தில் இருந்து நீர் சிந்திய  ஹரிதுவார், அலகாபாத், நாசிக், மத்தியபிரதேசம் உஜ் ஜைனி ஆகிய பகுதிகளில் கும்பமேளா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.வடஇந்தியாவிற்கு இ ந்தியாவின் அனைத்துபகுதிகளில் இருந்து மக்கள் துறவிகளை சந்திக்க ஆர்வமுடன் செல்கின்றனர். அ மிர்த கலசம் தலை கீழாக கவிழ்ந்த கும்பகோணம் மகாமக குளத்தில் நடைபெறும் மகாமகம் கும்பமே ளா போன்றது ஆனால் அதனை மகாமக தீர்த்தவாரி என்று சிறிய விழாவாக நடத்துகின்றனர். அதனை தென்பாரத கும்பமேளா என்று கொண்டாடவேண்டும்.

அதனை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறவிகள், ஆதீனமடாதிபதிகளை அழைத்து 2016 பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் 3  நாட்கள் துறவிகள் சொற்பொழிவு, ஆன்மீக கலைநிகழ்ச்சிகள் நடத்ததிட்டமிட்டுள்ளோம். மேலும் த மிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருக்கக்கூடிய துறவிகளையும் அழைத்து விழா நடத்த ஏற்பா டுகள் செய்து வருகிறோம் என்றார். இதில் காவிரி பாதுகாப்பு இயக்கம் முத்துக்குமரசாமி, அய்யப்பன் சேவாசமாஜ் சமீது அமைப்பு சிவராமன், மேகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன், அப்ப ர்சுந்தரம் உட்பட பலர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar