பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவில் மகா சம்ப்ரோஷணம் நேற்று நடந்தது.
இதற்கான பூஜை கடந்த 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு பகவத் பராத்னை, பாகவத அனுக்ஞை,
வாசுதேவ புண்யாசனம், அங்குரார்பணம், ஸோம ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் 28ம் தேதி காலை 8:00 மணி முதல் 12:00 மணி வரை விக்வக்ஸேன ஆராதனம், வாசுதேவ புண்யாஹசனம், ஆச்சார்ய எஜமான் ரக்ஷபந்தனம், யாகசாலை அக்னி பிரதிஷ்டை, மூலமந்திர ஹோமமும், மாலை 4:00மணிக்கு உத்ஸவர், மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா திருமஞ்சனமும், இரவு 6:00மணிக்கு மூலமந்திரஹோமங்கள், ஹோமங்கள், பூர்ணாஹூதி சாற்று முறைகள் நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம், விக்வக்ஷேன ஆராதனம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்து 8:00 மணிக்கு கோபுரங்களுக்கு மகா சம்ப்ரோஷணமும், அதனை தொடர்ந்து மூலவருக்கு மகா சம்ப்ரோஷணம் நடந்தது.