பதிவு செய்த நாள்
30
மே
2015
12:05
மதுரை:மதுரை வந்த சின்மய ஜோதி யாத்திரைக்கு சின்மயா மிஷன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜோதியை சுவாமி சிவயோகானந்தா ஊர்வலமாக எடுத்து வந்தார். சின்மயா மிஷனில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தன.சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: சுவாமி சின்மயானந்தர் பகவத்கீதை போன்ற ஆன்மிக நுால்களையும், மக்களிடையே நல்லிணக்கத்தையும் போதித்த மகான். சுவாமியின் நுாற்றாண்டு விழா மே 8 முதல் 2016 மே 8 வரை கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக அவரது வாழ்க்கை, உபதேசங்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் பல ஆன்மிக செய்திகளை தாங்கிய சின்மய யாத்திரை ரதம், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு 25 மாநிலங்கள் 150 நகரங்கள் வழியாக 238 நாட்களில் 25 ஆயிரம் கி.மீ., துாரம் பயணிக்கிறது.
இந்த ஜோதி யாத்திரை ரதம் மதுரை கே.கே.நகர் மற்றும் சர்வேயர் காலனி மகாத்மா பள்ளிகளில் இன்று (மே 30) காலை 10 முதல் மதியம் 2 மணி வரையிலும், மதியம் 3 முதல் மாலை 5 மணி வரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தரிசனத்திற்காக நிறுத்தப்படும் என்றார்.
ஹரி தியாகராஜன், சங்கரசீத்தாராமன், பிரேமலதா, டாக்டர் நம்பெருமாள்சாமி, பார்த்தசாரதி, வி.எச்.பி., இணைப் பொதுச்செயலாளர் சின்மயா சோமசுந்தரம், நிர்வாகி துரைப்பாண்டி, நெல்லைபாலு, தாம்பிராஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சின்மயா மிஷன் ஆரத்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.