பதிவு செய்த நாள்
30
மே
2015
01:05
கோபி: கோபி தாலுகா, நம்பியூர் பொலவபாளையம் கிராமம் புது அய்யம் பாளையத்தில், 300 ஆண்டு பழமை வாய்ந்த ஐயம் தீர்க்கும் விநாயகர், பொன் மாரியம்மன் கோவில், மாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மிகவும் சிதிலமடைந்த இக்கோவில், பல லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, 8 மணிக்கு ஐயம் தீர்க்கும் விநாயகர் கோவிலிலும், 9 மணிக்கு மேல் பொன் மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் நவ கிரஹங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பணி குழு தலைவர், புது அய்யம்பாளையம் பொன்னுசாமி, மலையப்பாளையம் ஸ்ரீஉதயகிரி முருகப்பெருமான் கோவில் அர்ச்சகர் பழனிசாமி ஆகியோர் தலைமையில், மலையப்பளையம் குமாரஞானசம்பந்தசிவம் வேத மந்திரங்கள் முழங்க, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கும்ப கலசத்துக்கு ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, காந்திபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து குதி ரை, யானையுடன் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாலை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிஷேகத்துக்குப்பின், தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டி, நம்பியூர் முன்னாள் ஒன்றிய செயலாளரும், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி. ஆர்., மன்ற துணை செயலாளருமான பொலவபாளையம் பொன்னுசாமி முன்னிலையில் சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.