பதிவு செய்த நாள்
30
மே
2015
01:05
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலின் தேரோட்டம், வெகுவிமர்சையாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, கடந்த, 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. 18ம் தேதி சந்தன அலங்காரம், அம்மன் சிறப்பு வழிபாடு, கிராம பூஜை, 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 22ம் தேதி சக்தி அழைத்தல், அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா, 25ம் தேதி அலகு குத்துதல், அக்னி சட்டி, பால் குடம் எடுத்தல், குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், 26ம் தேதி நடந்தது. பெரம்பலூரை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 27ம் தேதி மஞ்சள் நீராடுதல், குடிவிடுதல், அம்மன் இரவு ஊஞ்சல் நிகழ்ச்சியும், வரும் ஜூன், 2ம் தேதியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கிராம காரியஸ்தர்கள் சரவணன், வெள்ளைச்சாமி, உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.