கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் இரட்டை நடராஜர்களைத் தரிசிக்கலாம். இங்கு ஒரே சன்னிதியில் இருவரும் அருகருகே காட்சி தருகின்றனர். ஒரு நடராஜருக்கு தை முதல் ஆனி மாதம் வரையிலும், இன்னொருவருக்கு ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலும் (ஒன்று உத்ராயணம் மற்றது தட்சிணாயனம்) பூஜைகள் நடைபெறுகின்றன.