கரூர், மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள திருஈங்கோய் மலையில் அருள்பாலிக்கும் மரகதாசலேசுவரரை அகத்திய முனிவர் தேனீயாக உருவெடுத்து வழிபடுகின்றார் என்று கூறப்படுகிறது. எனவே, இங்கு யாரும் தேனீக்களை துன்புறுத்துவதில்லை. இங்கு மாசி மாத சிவராத்திரியின்போது மூன்று நாட்கள் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழுகிறது. இந்த நேரத்தில் லிங்கம் நிறம் மாறிக் காட்சி தருவது சிறப்பு.