கரூருக்கு வடகிழக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது வெண்ணெய் மலை பாலமுருகன் கோயில். இக்கோயிலின் நுழைவு வாயிலில் பெரிய கருங்கல்லினால் ஆன தீபஸ்தம்பம் உள்ளது. இங்கு முருகன் தனித்து அருள்பாலிக்கின்றார். இம்மலையின் பாறை உச்சி வெயிலிலும்கூட குளிர்ச்சியாகவே இருப்பது தனிச்சிறப்பு.