புதுார்: புதுார் காந்திபுரம் வர சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை 4ம் கால பூஜை முடிந்து 10 மணிக்கு பூர்ண கும்பம் புறப்பாடு நடந்தது. பின் கருவறை, கோபுர கலசங்களில் புனித நீர்ஊற்றி சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது.