இந்த உலகில் வாழ்கிற வரையில் துணிவுடன் செயலாற்று. வெற்றியோ, தோல்வியோ எது நேர்ந்தாலும், இரண்டில் ஒன்று பார்த்து விடு.ஒருவர் பெரிய ஆள் என்பதற்காக அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளாதே. உன் சொந்தக் கருத்தில் எப்போதும் நிலைத்து நில். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று. ஒழுக்கம் மிக்கவன், கல்விமானைக் காட்டிலும் மேன்மை மிக்கவனாகத் திகழ்வான். இருதயமாகிய புத்தகத்தைப் படித்து விட்ட ஒருவனுக்கு, மற்ற புத்தகங்கள் தேவைப்படுவதில்லை.உலகிலுள்ள ஒவ்வொரு மதமும், ஒரே உண்மையை வெவ்வேறு பாதையில் அடைய வழி காட்டுகின்றன.ஒருவருக்கொருவர் உதவி செய்தும், நேசித்தும் வாழத் தொடங்கினால் கடவுளின் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளும்.
மனிதனாகப் பிறந்ததற்கு பெருமை அளிக்கும் செயலைச் செய்து முடி. உலகை விட்டு செல்லும் நாளில் சிரித்தபடியே செல்வாய். நீ தலைவனாக விரும்பினால், அனைவருக்கும் தொண்டனாக மாறி விடு. இதுவே தலைமைப் பண்பை பெறுவதற்கான ரகசியம்.எந்த செயலில் ஈடுபட்டாலும், அதை அந்த நேரத்திற்குரிய இறைவழிபாடாகவே செய்.லட்சியம் உயர்ந்ததாக இருந்தால், அதை அடையும் வழியும் துன்பம் நிறைந்ததாகவே இருக்கும். உயர்ந்த கருத்தை ஏற்றுக் கொண்டு, அதற்காக உன் வாழ்வையே அர்ப்பணித்து விடு. தான் என்னும் தற்செருக்கை வென்று விட்டால், உலகமெல்லாம் உன்னுடையதாகி விடும்.உன்னை செயலாற்ற வைக்கும் உந்து சக்தி சிந்தனை. அதனால், மனம் எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிரம்பியதாக இருக்கட்டும். தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் மனிதனுக்கு அவசியம். இவை இணைந்து செயலாற்றினால் வெற்றி உனக்கே. மனிதன் தன்னை மறந்த நிலையில், மன ஒருமையுடன் பணியில் ஈடுபட்டால் அழியாத சிறப்பை அடைவான். (மகான் விவேகானந்தர்)