தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலில் முல்லைவன நாதர் மூலவராக இருக்கிறார். மூலவர் லிங்க வடிவில் சுய ம்புவாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கம் புற்றுமண்ணால் ஆனது. நோய்தீர்க்கும் இந்த தலத்தில் உள்ள அம்பிகையிடம் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் வேண்டிக்கொள்கிறார்கள். எல்லா கோயில்களிலும் தல விருட்சம் மரமாகத்தான் இருக்கும். ஆனால் இந்தக்கோயிலில் முல்லைப்பூக்கொடி தல விருட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.