முருகன் என்ற நான்கெழுத்து பெயரில் மு என்றால் முகுந்தன் அல்லது விஷ்ணுவையும், ரு என்றால் ருத்ரன் அல்லது சிவனையும், க என்றால் கமலன் அல்லது பிரம்மாவையும், ன் என்பது தமிழ்மொழியின் கடைசி எழுத்தையும் குறிக்கும். தமிழ்க்கடவுளாகிய முருகனின் தத்துவம் மும்மூ ர்த்திகளையும் உள்ளடக்கியதாகும். இறைவன் நாதவடிவமாக இருக்கிறான் என்பதை விளக்கும் வகையில் நாதத்தை முழங்கும் சேவல்கொடியை முருகன் வைத்திருக்கிறான். அது கொக்கறக்கோ என்று கூவுகிறது. அந்த கூவும் சத்தமே ஒரு நாதம்போல் இருக்கிறது. கொக்கு என்றால் சூரனாகிய மாமரம் என பொருள். அறு என்றால் அறுத்த என்றும், கோ என்றால் அரசன் என்றும் பொருள். சூரனை வேரறுத்த அரசன் என்பது கொக்கறக்கோவின் பொருளாகும். முருகனின் வாகனம் மயில். அதன் தோகை விரியும்போது அதன் முழு வடிவமைப்பு ஓ என்ற பிரணவ சொரூபமாக உள்ளது. இதிலிருந்தே ஓம் என்பது பிறந்தது.