ஒரு மனிதனின் உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை ஆ + லயம் என பிரிக்க வேண்டும். ஆ என்றால் உயிர் என்றும், லயம் என்றால் லயிக்கின்ற என்றும் பொருள். உயிர்கள் லயிக்கின்ற இடம் ஆலயம் என ப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல் கோபுரங்கள். கொடிமரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத்தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். மனிதனின் நாபி ஸ்தானத்தைக் குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலிபீடம் அமைக்கப்படுகிறது. புருவ மத்தியை கர்ப்பகிரகம் என்கிறார்கள். தியானம் செய்யும்போது நமது நினைவை புருவ மத்திக்கு கொண்டு வரவேண்டும். அதுபோல இறைவனை வணங்கும்போதும் வேறு எந்த சிந் தனையும் இன்றி புருவ மத்திக்கு நினைவுகளை கொண்டுவந்து வழிபடுவதே முறையானதாகும்.