வெம்பக்கோட்டை: சிவகாசி ஹயக்ரீவர் இன்டர்நேஷனல் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஆலோசகர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். முதல்வர் சந்திரசேகரன் வரவேற்றார். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து வழிப்பட்டனர். துணை முதல்வர் சண்முகவேல் நன்றி கூறினார்.