Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிமனிதர் வரைந்த சித்திரங்கள் ... திருக்கணித முறைப்படி நேற்று குரு பெயர்ச்சி விழா! திருக்கணித முறைப்படி நேற்று குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்வநாதீஸ்வரர் கோவில் நந்திகேஸ்வரர் மீது கல் தூண் சரிந்தது!
எழுத்தின் அளவு:
வில்வநாதீஸ்வரர் கோவில் நந்திகேஸ்வரர் மீது கல் தூண் சரிந்தது!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2015
11:07

திருவண்ணாமலை: வேலூர் அடுத்த, திருவலம் வில்வநாதீஸ்வரர் கோவிலில், நந்திகேஸ்வரர் சிலை மீது, கல் தூண் சரிந்து விழுந்ததால், அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர். தட்சண் யாகம் நடத்திய இடமாகவும், விநாயகர் தாய், தந்தையை உலகமாக கருதி, வலம் வந்து ஞானப்பழத்தை பெற்ற இடமாகவும் கருதப்படும், திருவலம், தனுமத்யாம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோவில், வேலூர் அருகே, 15 கி.மீ., தொலைவில் உள்ளது. பிரசித்தி பெற்ற மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில், எங்கும் இல்லாத வகையில் நந்தி பகவான், மூலவரை நோக்காமல், கிழக்கு நோக்கி மிக பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது சிறப்பாகும். நந்திகேஸ்வரருக்கு முன் கொடி மரமும், பலிபீடமும் அமைந்துள்ளது. இந்நிலையில், நந்திகேஸ்வரரின் அருகில், மண்டபத்தில் விதானத்தை தாங்கி நிற்கும் கல் தூண்களில், ஒன்று நேற்று அதிகாலை, நந்தி பகவான் மீது சரிந்து விழுந்தது. கோவில் நடையை திறக்க வந்த அர்ச்சகர்கள் இதை கண்டு, அதிர்ச்சி அடைந்தனர். அர்ச்சகர்கள் கொடுத்த தகவலின் படி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு வந்தனர். இத்தகவல் பரவியதால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோவிலில் திரண்டனர். பக்தர்கள் ஒன்று சேர்ந்து, நந்திபகவான் மீது விழுந்திருந்த கல்தூணை பத்திரமாக அப்புறப்படுத்தியதுடன், பரிகார பூஜை செய்தனர். நந்திபகவான் சிலை மீது கல்தூண் மீது விழுந்தும், எந்தவித சேதமும் ஏற்படாததால், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar