Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் ... அவலூர்பேட்டையில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்த தீட்சிதருக்கு சிலை அவசியம்: அஹோபில மடத்தின் பீடாதிபதி கருத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2015
12:07

கும்பகோணம்: ""கும்பகோணம், மகா மககுளத்தை தீர்மானித்த கோவிந்த தீட்சிதருக்கு சிலை அமைப்பது அவசியமானது, என அஹோபில மடத்தின், 46வது பட்டம் அழகிய சிங்கர் சுவாமிகள் தெரிவித்தார். கும்பகோணம் சாரங்கபாணி கோவில் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக, கும்ப கோணம் வந்திருந்த அஹோபில மடத்தின் பீடாதிபதி அழகிய சிங்கர் சுவாமிகள் கூறியதாவது: கோவிந்த தீட்சிதருக்கு சிலை வைக்க வேண்டும், என்பது பலரின் விருப்பமாக உள்ளது. அது அவசியம். ஒவ்வொரு ஊரிலும் அய்யன் வாய்க்கால், அய்யன் குளம் என்ற பெயருடன் திகழ்கிறது. அதெல்லாம் அவர் உருவாக்கியது. தர்ம சாஸ்திரங்கள் வைக்க வேண்டும், உலகம் தழைக்க வேண்டும் என்றால், வேதம் தழைக்க வேண்டும். வேதம் தழைக்க, கும்ப கோணத்தில், 460 ஆண்டுகளுக்கு முன், வேத பாடசாலையை நிறுவினார். அதற்கு ராஜா வேதபாட சாலை என பெயரிடப் பட்டுள்ளது. திருவையாறு அருகே உள்ள அம்மன் அக்ரஹாரத்திலும் பாடசாலை அமைத்துள்ளார். உலகத்தில் எந்தந்த காலங்களில் எந்தந்த செயல்கள் செய்யவேண்டும் என வேதத்தில் கூறியிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள மந்திரங்களை, அந்தந்த காலங்களில் செய்து காண்பித்தவர். பயிர்கள் நன்றாக வளர்ந்து அனைவரும் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, பல நற்காரியங்களை செய்துள்ளார். கும்பகோணத்தில் மகாமக குளம் உருவானதற்கு காரணமே அவர் தான். பல தர்மங்களை செய்துள்ளார். அவருக்கு சிலை வைக்க வேண்டியது அவசியம். மகாமககுளத்தில் அவரது சிலையை வைக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar