Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » த்ரிவிக்ரமன் அவதாரம்
த்ரிவிக்ரமன் அவதாரம்
எழுத்தின் அளவு:
த்ரிவிக்ரமன் அவதாரம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
04:07

1. ப்ரீத்யா தைத்ய: தவ தனுமஹ:
ப்ரக்ஷேணாத் ஸர்வதாபி
த்வாம் ஆராத்யந் அஜித ரசயந்
அஞ்ஜலிம் ஸஞ்ஜகாத
மத்த: கிம் தே ஸமலபிஷிதம்
விப்ரஸுனோ வத த்வம்
வ்யக்தம் பக்தம் பவனம் அவனீம்
வாபி ஸர்வம் பிரதாஸ்யே

பொருள்: குருவாயூரப்பா! யாராலும் வெல்லப்பட முடியாதவனே! உனது உடலில் இருந்து வெளிவந்த கம்பீரமான ஒளியைக் கொண்டு உன் மீது மிகுந்த அன்பு கொண்ட மகாபலி, உன்னை நோக்கி கைகளைக் கூப்பினான். அதன்பிறகு, உன்னிடம், ப்ராமணச் சிறுவனே! உனக்கு வேண்டியது என்ன? உணவா, வீடா, நிலமா அல்லது இவை அனைத்துமா - எது வேண்டும்? கேள், தருகிறேன் என்று கூறினான்.

2. தாம் அக்ஷீணாம் பலிகிரம் உபாகர்ண்ய
காருண்ய பூர்ண: அபி
அஸ்ய உத்ஸேகம் ச மயிதுமனா:
தைத்யவம்சம் ப்ரசம்ஸன்
பூமிம் பாதத்ரய பரிமிதாம்
ப்ரார்த்தயாம் ஆஸித த்வம்
ஸர்வம் தேஹீதி து நிகதிதே கஸ்ய
ஹாஸ்யம் நவாஸ்யாத்

பொருள்: குருவாயூரப்பனே! எந்தவிதமான செல்வக் குறையுமில்லாத மகாபலியின் வார்த்தைகளைக் கேட்ட நீ கருணையுடன் அமைதியாக நின்றாய். அவன் கர்வத்தை அடக்குவதற்கு எண்ணி அவனது குலத்தை உயர்வாகப் புகழ்ந்து பேசினாய். பின்னர் அவனிடம், என் கால்களில் மூன்று அடி அளவு மண் நிலம் வேண்டும் என்று நீ கேட்டாய். உனது சிறிய வடிவத்தைக் கண்டும், உனது கால்களின் அளவு கண்டும், உனது இந்த யாசகத்தை நினைத்தும் யார்தான் சிரிக்கமாட்டனர்?

3. விச்வேசம் மாம் த்ரிபதம் இஹ கிம்
யாசஸே பாலிச: த்வம்
ஸர்வாம் பூமிம் வ்ருணு கிம் அமுனா
இதி ஆலபத் த்வாம் ஸ த்ருப்யந்
யஸ்மாத் தர்பாத் த்ரிபத ப்ரிபூர்த்ய
க்ஷம: க்ஷேமவாதான்
பந்தம் ச அஸௌ அகமத்
சுததர்ஹோபி காடோபசாந்த்யை

பொருள்: குருவாயூரப்பா! இதனைக் கேட்ட மகாபலி உன்னிடம், நான் மூன்று உலகங்களுக்கும் தலைவனாக உள்ளவன். என்னிடம் வெறும் மூன்று அடிகளையா யாசிப்பது? இத்தனை சிறிய இடத்தினைப் பெற்று என்ன பயன்? நீ கேட்பது பேதைத்தனமாக உள்ளதே? என்று மிகுந்த கர்வத்துடன் கூறினான். இந்தக் கர்வத்தினால் மட்டுமே அவனால் அந்த மூன்றடிகளைத் தர இயலாமல் போனது; அதனால் பழிச் சொல்லுக்கு ஆளானான். இத்தகைய அவமானங்களை அவன் அடைய வேண்டியது இல்லாமல் இருந்த போதிலும், அவன் கர்வத்தால் அடைந்தான்.

4. பாதத்ரய்யா யதி ந முதித: விஷ்டபை
ந அபி துஷ்யேத்
இதி உக்தே அஸ்மின் வரத பவதே
தாது காமே அத தோயம்
தைத்யாசர்யத்: தவ கலு
பரீக்ஷார்த்தின: ப்ரோணாத்தம்
மா மா தேயம் ஹரி: அயமிதி
வ்யக்தமேவ ஆபபாஷே

பொருள்: குருவாயூரப்பனே! நீ மகாபலியிடம், அரசனே! மூன்று அடி நிலம் தரவில்லை என்றால், தான் யாசித்ததை பெறாமல் மகிழ்வு அற்றவனான ஒருவன் மூன்று உலகங்கள் கிடைத்தாலும் மகிழ்வு கொள்ள மாட்டான் என்றாய். உடனே மகாபலி நீ விரும்பியபடி நிலத்தை அளிக்க தான நீருடன் தயாராக நின்றான். அப்போது அவன் குருவான சுக்ராச்சாரியார், உனது தூண்டுதல் காரணமாக, அரசனே! கொடுக்காதே! கொடுக்காதே! இவன் அந்த ஹரியே ஆவான் என்றார் அல்லவா?

5. யாசத்யேவம் யதி ஸ பகவான்
பூர்ணகாம: அஸ்மி ஸ: அஹம்
தாஸ்யாமி ஏவ ஸ்திரம் இதி வதந்
காவ்ய சப்தோபி தைத்ய:
விந்த்யாவல்யா நிஜதயிதயா
தத்தபாத்யாய துப்யம்
சித்ரம் சித்ரம் ஸகலம் அபி ஸ:
ப்ராப்பயத் தோய பூர்வம்

பொருள்: குருவாயூரப்பனே! சுக்ராச்சாரியாரின் சொற்களைக் கேட்ட மகாபலி அவரிடம். (நீங்கள் கூறியபடி) அந்தப் பகவானே இங்கு வந்து என்னிடம் யாசிக்கிறான் என்றால் எனது விருப்பம் அனைத்தும் நிறைவேறியவனாகவே நான் உள்ளேன். எனவே நான் தானம் அளிக்கவே போகிறேன் என்றான். (உடனே சுக்ராச்சாரியார் அவனை, நீ உனது நாட்டை இழக்கப்போகிறாய் என்று சபித்தார். இதுவும் பகவான் எண்ணமே. இப்படிச் சபித்தால்தான் அவனிடம் இருந்து உலகங்களை கைபற்ற இயலும்). சுக்ராச்சாரியாரின் சாபத்தை ஏற்ற மகாபலி, தனது மனைவியான விந்தியாவளீ என்பவள் தானநீரை அவன் கைகளில் விட, அவனும் நீ கேட்டவற்றை தானமாக அளித்தான். (மகாபலியின் மனைவியுடைய பதிபக்தியை எண்ணி ஆச்சர்யம் என்கிறார்.)

6. நிஸ்ஸந்தேஹம் திதிகுலபதௌ
த்வயி அஷோர்ப்பணம் தத்
வ்யாதன்வாநே முமுசு:
ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம்
திவ்யம் ரூபம் தவ ச தத் இதம்
பச்யதாம் விச்வபாஜாம்
உச்சை: உச்சை: அவருதத்
அவதீக்ருத்ய விச்வாண்ட பாண்டம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! திதியின் குலத்தின் வழிவந்த மகாபலி சிறிதளவும் சந்தேகமே இல்லாமல் உன்னிடம் நீ கேட்டவற்றை அர்ப்பணம் என்று அளித்தான். அவனது இந்தச் செயலைக் கண்ட தேவர்கள், ரிஷிகள் அவன் மீது மலர்களைத் தூவினர். அப்போது இந்த உலகில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த சிறிய உருவம் (இது வாமனனைக் குறித்துக் கூறியதாகவும், அல்லது குருவாயூரப்பனைப் பார்த்துக் கூறியதாகவும் கொள்ளலாம்.) அனைத்து அண்டங்களுக்கும் மேலே மேலே வளரத் தொடங்கியது.

7. த்வத் பாதாக்ரம் நிஜபதகதம்
புண்டரீ கோத்பவ அஸௌ
குண்டீ தோயை: அஸிசத்
அபுநாத் யஜ்ஜலம் விச்வலோகான்
ஹர்ஷோத் கர்ஷாத் ஸுபஹு
நந்ருதே கேசரை: உத்ஸவே அஸ்மின்
பேரீம் நிக்நந் புவனம் அசரத்
ஜாம்பவாந் பக்திசாலீ

பொருள்: குருவாயூரப்பா! இப்படி நீ வளர்ந்தபோது உனது திருவடியானது (ஓர் அடி எடுத்து வைக்கும் போது) ப்ரும்மலோகமான ஸத்யலோகத்தை அடைகிறது. உடனே ப்ரும்மா தனது கமண்டலத்தில் உள்ள நீரினால் உனது திருவடியைக் கழுவினார். அந்த நீரானது இந்த பூமியை வளப்படுத்தியது. (அதுவே கங்கையாகும்). இதனைக் கண்ட தேவர்கள் நடனம் ஆடினர். உன்னிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த ஜாம்பவான் தனது வாத்தியத்தை முழங்கியபடி இந்த உலகத்தைச் சுற்றி வந்தான்.

8. தாவத் தைத்யா: து அவமதிம்
ருதே பாத்து: ஆரப்த யுத்தா:
தேவ: உபேதை: பவதனுசரை:
ஸங்கதா பங்கமாபந்
காலாத்மா அயம் வஸதி புரதோ
யத்வசாத் ப்ராக்ஜிதா: ஸ்ம:
கிம் வோ யுத்தை: இதி பலிகிரா
தே அத பாதாலமாபு;

பொருள்: குருவாயூரப்பனே! அந்த நேரம் அசுரர்கள் தங்கள் அரசனான மகாபலியின் உத்தரவு இல்லாமல் உன்னைத் தாக்கத் தொடங்கினர். அவர்கள் உனது அடியார்களால் தடுக்கப்பட்டனர். மகாபலி அசுரர்களிடம், நாம் யாருடைய தயவால் முன்பு வெற்றியை அடைந்தோமோ, அந்த பகவானே இதோ நம் கண்முன்னே காலத்தை கடந்து நிற்கிறான். நாம் யுத்தம் செய்து என்ன பயன்? என்றான். இதனைக் கேட்ட அசுரர்கள் பாதாள லோகத்திற்கு ஓடிவிட்டனர்.

9. பாசை: பத்தம் பதக பதினா
தைத்யம் உச்சை: அவாதீ:
தார்த்தீயீகம் திச மம பதம்
கிந்த விச்வேச்வரோஸி
பாதம் மூர்த்னி ப்ரணய பகவந்
இதி அகம்பம் வதந்தம்
ப்ரஹ்லாத: தம் ஸ்வயம் உபகத:
மாநயந் அஸ்தவீத் த்வாம்

பொருள்: குருவாயூரப்பா! அப்போது கருடனால் வருணன் என்ற பாசக்கயிற்றால் மகாபலி கட்டப்பட்டான் (அவனுக்கு கோபம் ஊட்டும் விதமாக). அதன் பின்னர் நீ அவனை நோக்கி, நீ இந்த உலகம் அனைத்திற்கும் அதிபதி என்றாயே! எனக்கு உரிய மூன்றாவது அடி நிலத்தைக் கொடு! என்றாய். அப்போது மகாபலி சிறிதும் பயமோ கோபமோ கொள்ளாமல், பகவானே! நாராயணா! எனது தலைமீது உள்ள மூன்றாவது அடியை வைத்துக் கொள் என்றான். இதனைப் பாராட்டியபடி ப்ரஹ்லாதன் அங்கு வந்து உன்னை துதித்தான்.

10. தர்ப்போசித்யை விஹிதம் அகிலம்
தைத்ய ஸித்த: அஸிபுண்யை:
லோக: தே அஸ்து த்ரிதிவ
விஜயீ வாஸவத்வஞ்ச பச்சாத்
மத்ஸாயுஜ்யம் பஜ ச புன: இதி
அன்வ க்ருஹ்ணா பலிம் தம்
விப்ரை: ஸந்தாநிதமகவர:
பாஹி வாதாலயேச

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ மகாபலியை நோக்கி திதியின் குலத்தில் உதித்தவனே! உனது கர்வத்தை அடக்கவே நான் இப்படிச் செய்தேன். நீ செய்த புண்ணிய காரியங்களால் நீ நன்மை பெற்றவனாக உள்ளாய். சுவர்க்கத்திற்கும் மேலான லோகம் உனக்கு உண்டாகட்டும் ( அது ஸுதலம் எனப்படும் பாதாள கீழ்லோகம் ஆகும்). அதன் பின்னர் இந்திரப் பதவியும் நீ அடைவாய் இறுதியில் எனது மோட்ச ராஜ்ஜியமும் அடைவாய் என்றாய். இப்படியாக நீ என்னையும் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar