அன்னபூர்ணேஸ்வரிக்கு 1008 லட்டுகளால் கருவறை முழுக்க அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2025 11:10
கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி, 1,008 லட்டுகளால் கருவறை முழுக்க, தேர் போன்று அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அம்பாளை தரிசிக்க காலை 5:00 மணி முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். திரளான பக்தர்கள் நேற்று இரவு 8 மணி வரை, அம்பாளை தரிசித்தனர். அனைவருக்கும், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.