சிவகாசி: சிவகாசி அருகே எரிச்சநத்தம் மாசானி அம்மன் கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். திரளான பெண்கள், பொதுமக்கள் அம்மனை தரிசித்தனர். ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்க இருப்பதாக கோயில் மேனஜிங் டிரஸ்டி ரங்கராஜா, இளஞ்செளியன் தெரிவித்தனர்.